முல்லைத்தீவில் தீபாவளி நாளில் நடத்த விபரீத சம்பவம்..!!
இலங்கையில் பல பாகங்களில் வெகு விமர்சையாக தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் வேளையில் எதிர்பாராத சந்தர்பத்தில் வீடொன்றின் மீது பட்டாசு விழுந்து தீப்பற்றிய சம்பவம் முல்லைத்தீவு கைவேலி பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கொழுத்தி மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் முல்லைத்தீவு –கைவேலிப்பகுதியில் இன்று காலை (29) அளவில் வீடொன்றின் மீது விழுந்த பட்டாசால் வீடொன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது
தீயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், வீட்டிலிருந்து எந்தவொரு பொருட்களையும் மீட்கமுடியாது அனைத்தும் தீக்கு இரையாகியுள்ளன.
குறித்த வீட்டில் தாய் மற்றும் 2 பிள்ளைகள் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை குறித்த பெண் கடந்த மூன்று மாதங்களாக தனது கணவர் பிரிந்து வாழ்வதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வாழும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேசத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
எதிர்வரும் காலத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடன் தான் என்ன செய்யப்போகின்றேன் வசிக்க வீடில்லாத நிலைக்கு இன்றைய நாளில் தாம் தள்ளப்பட்டு விட்டோம் என குறித்த பெண் கவலை தெரிவித்துள்ளார்.
தீபாவளி நாளில் இப்படியொரு துயர் நடந்தது அப்பிரதேசத்தவரிடையே பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது
Average Rating