வவுனியாயில் வீடொன்றில் வாள்வெட்டு சம்பவம் காரணமாக பதற்ற சூழ்நிலை..!!
Read Time:1 Minute, 15 Second
வவுனியா – பம்பைமடு கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
பம்பைமடு கிராமத்தில் உள்ள கேணி ஒன்றில் குளித்து விட்டு செல்லும் வழியில் கிராமத்திலுள்ள வீடொன்றில் சில இளைஞர்கள் புகுந்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தோடு தமது கிராமத்திற்கு சென்று மேலும் பலரை அழைத்து வந்து வாள் மற்றும் தடி பொல்லுகள் உட்பட இடியன் துப்பாக்கிகளையும் காட்டி கிராம மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்தும் இதுவரையிலும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அயல் கிராமம் ஒன்றிலிருந்து வந்த இளைஞர் குழுவினரே இவ்வாறு அடாவடி செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Average Rating