ஹோட்டல் உரிமையாளர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை…!!
Read Time:51 Second
நிட்டம்புவ-உரபொல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து நபர் ஒருவர் சடலமாக இன்று காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் ஹோட்டலின் உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சடலத்துடன் பூச்சி கொல்லி மருந்தும் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating