புறாவிற்கு தீனி வைக்க முயன்ற சிறுவன் பரிதாபகரமாக பலி…!!

Read Time:1 Minute, 39 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-5மட்டக்களப்பு-தும்பங்கேணி பகுதியில் சிறுவன் ஒருவன் புறாவிற்கு தீனி வைக்க முயன்ற போது வழுக்கி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (01) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவன் 12வயதுடைய குருகுலசிங்கம் கஜேந்திரன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிறுவன் தன் வீட்டின் மலசல கூடத்திற்கு மேல் பகுதியில் தான் வளர்ந்து வந்த புறா கூட்டினுள் புறாவிற்கு தீனி வைப்பதற்காக ஏறமுயன்ற வேளையில் வழுக்கி விழுந்துள்ளான்.

வழுக்கி விழுந்த சிறுவன் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வழியிலேயே உயிரிழந்துள்ளதுடன் உயிரிழந்த சிறுவனுடைய சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வறுமையான குடும்பத்தில் பிறந்த இந்த சிறுவன் இடை நடுவில் கல்வியை கைவிட்டிருந்ததாகவும் இவருடைய தந்தை அன்றாட குடும்பச் செலவுக்காக கூலித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் தொடர்ந்து பிடிபடும் கஞ்சா..!!
Next post மின்சாரம் தாக்கி ஒருவர் பலி…!!