பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகள்…!! வீடியோ
Read Time:58 Second
நீலகிரி: குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அவ்வப்போது வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுவதுண்டு.
அவற்றை அவ்வழியே வாகனத்தில் வருபவர்கள் நின்று ரசித்து விட்டுச் செல்வர். அந்தவகையில் இன்று மலைப்பாதையில் மரப்பாலம் அருகே இரண்டு சாரைப் பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து நடனமாடிய அரிய காட்சியை வாகனங்களில் சென்றவர்கள் நின்று ஆர்வத்துடன் பார்த்தனர்.
சுமார் அரை மணி நேரம் பாம்புகள் நடனம் தொடர்ந்தது. சினிமாவில் மட்டுமே பார்த்த இத்தகைய காட்சியை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது குறித்து பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Average Rating