மர்மமான முறையில் செயற்பட்ட கொள்ளை கும்பல்! கொட்டாஞ்சேனையில் சுற்றிவளைத்த பொலிஸார்…!!
சுங்க பிரிவு உதவிப் பணிப்பாளர் எனக் கூறிக்கொண்டு பாரிய மோசடியில் ஈடுபட்ட வந்த குழுவொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறைந்த விலையில் மதுபானம் பெற்றுத் தருவதாக பல்வேறு நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்ட குழுவின் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ராகம, வத்தளை மற்றும் ஜாஎல ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சுங்கபிரிவு உதவிப் பணிப்பாளர் என கூறும் நபர் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வசிக்கும் பல்வேறு நபர்களின் தொலைப்பேசி இலக்கங்களை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டுள்ளார்.
வெளிநாட்டு மதுபானங்களை மிகவும் குறைந்த விலையில் வழங்க முடியும் என குறிப்பிட்டு கொள்வனவாளர்களை ஓரிடத்திற்கு வருமாறு அழைப்பார்கள்.
அங்கு வருபவர்களிடம் மதுபானங்களை வழங்காமல் பணம் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த மோசடி மூலம் பாதிக்கப்பட்ட நபர்கள் இருந்தால் 071 859 17 27 அல்லது 011 2 66 23 23 என்ற இலக்கங்களுக்கு தகவல் வழங்குமாறும் கொழுப்பு குற்றத் தடுப்பு பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
Average Rating