யாழ். வலிகாமத்தில் கடும் மழை…!!
Read Time:1 Minute, 20 Second
யாழ். வலிகாமம் பிரதேசத்தில் இன்று பிற்பகல் கடும் மழை பெய்துள்ளது. பிற்பகல்-04.30 மணியளவில் ஆரம்பமான மழை தொடர்ச்சியாக நீடித்து வருகிறது.
தொடர் மழை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக வலிகாமத்தின் பல்வேறு இடங்களிலும், வீதிகளிலும் வெள்ள நீர் தேங்கிக் காணப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வலிகாமத்தில் மழை வீழ்ச்சி பதிவாகியிருந்த போதும் இன்றைய தினமே பரவலாகக் கூடுதல் மழை வீழ்ச்சி பதிவாகி வருவதை அவதானிக்க முடிகிறது.
இதேவேளை, இன்றைய தினம் காலை வலிகாமத்தில் மிதமான மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் கடுமையான வரட்சியால் குடாநாட்டைச் சேர்ந்த விவசாயிகள் உட்படப் பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Average Rating