குளவிக் கொட்டுக்கு இலக்காகி 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி…!!
Read Time:1 Minute, 23 Second
தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 21 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை தங்ககலை கீழ்பிரிவு தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இச்சம்பவம் 04.11.2016 அன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் சிலர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், மேலும் சிலர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 5 ஆண்களும், 16 பெண்களும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.
Average Rating