யாழில் கைதான மூவருக்கு கொழும்பில் விளக்கமறியல்..!!

Read Time:1 Minute, 26 Second

jail-6யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞர்கள், இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணை இன்னும் பூர்த்திசெய்யப்படாத நிலையில், பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் இவ் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆவா குழுவில் அங்கம் வகிக்கின்றார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் யாழில் நேற்றுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்னால் முடிந்ததை செய்து விட்டேன்: மருத்துவர் ரிச்சர்ட் பேச்சால் பரபரப்பு..!!
Next post 70 வருடங்களுக்கு பின்னர் வானில் நிகழவுள்ள அதிசயம்!!- வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!