வவுனியாவில் செல்கள் மீட்பு – சம்பவ இடத்தில் விசேட அதிரடிப்படையினர்..!!
Read Time:1 Minute, 5 Second
வவுனியா – ஓயார் சின்னக்குளத்தில் இருந்து இன்று(08) காலை 10.00 மணியளவில் நான்கு செல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா ஓயார் சின்னக்குளம் நான்காம் ஒழுங்கையில் இன்று காணி உரிமையாளர் காணியினை சுத்தம் செய்த போது நான்கு செல்களை கண்டுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக கிராம அபிவிருத்திச்சங்க தலைவருக்கு அறிவித்தமையினையடுத்து கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வவுனியா பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் செல்லை செயலிழப்பதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Average Rating