திருட்டுக்காக 7 வயது சிறுவனை எரித்து கொடூர கொலை ! – மனதை பதற வைக்கும் சம்பவம்…!!
மனிதாபிமானம் தற்போது செத்து விட்டது, உலகம் அழிவை நோக்கி பயணிக்கின்றது என்பதனை நிரூபிக்கும் வகையில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நேற்று நைஜீரிய நாட்டின் ஒரு நகரத்தில் இடம்பெற்றுள்ளது.
7 வயது சிறுவன் ஒருவன், உணவகம் ஒன்றில் திருட முயன்ற குற்றத்திற்காக அதி பயங்கரமாக அடித்து, உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் ஊடாக பரவிவருகின்றது.
கெறி எனப்படும் ஆப்பிரிக்காவில் பிரபலமான வடை வகை உணவை திருட முயன்ற குற்றத்திற்காக, இத்தகைய கொடூர தண்டனை பொது மக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த நாட்டின் சட்ட திட்டத்திற்கு அமைய திருட்டுக்கு பொலிஸ் பொறுப்பு கூறாது எல்லாமே நாட்டின் நீதிபடி தான் நடைபெறுகின்றது எனவும் கூறப்படுகின்றது.
தற்போதும் இவ்வாறான செயல்கள் உலகில் இடம் பெற்று வருகின்றமை உலகில் மனிதாபிமானம் அழிக்கப்பட்டு வருகின்றமைக்கு சான்றாக அமைவதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக விமர்சிக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.
Average Rating