திருமணம் ஆகாதவர்களிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்டுவிடாதீர்கள்…!!
பொதுவாக நம் வீட்டில் பருவமடைந்த பெண்கள் இருந்தால் போதும், உங்கள் பெண்ணிற்கு எப்போழுது திருமணம் செய்யப் போகிறீர்கள் என கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
அதிலும் பெண்களுக்கு 30 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்தால், அவ்வளவு தான் சொல்லவே தேவையில்லை.
திருமணம் செய்த மூன்று மாதத்தில் ஒரு பெண் கருத்தரிக்காமல் இருந்தால், அவ்வளவு தான் இந்த சமூகம் அவர்களின் மீது பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பார்கள்.
மேலும் இது போன்ற வகையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கும் பெண்கள் தான்.
எனவே அப்படி இருக்கும் பெண்களிடம் ஒருசில கேள்விகளை மட்டும் கேட்கவே கூடாது, அது எந்த மாதிரியான கேள்வி என்பதைப் பற்றி பார்ப்போம்.
திருமணம் ஆகாத 30 வயதிற்கும் மேல் உள்ள பெண்களிடம் கேட்கக் கூடாத கேள்விகள்
வயது 30 ஆகியும் ஏன் இன்னும் திருமணம் பண்ணல?
நீங்கள் லவ்வு பண்றீங்களா? அல்லது லவ் ஃபெயிலியரா?
உங்கள் ஜாதகத்துல ஏதாவது பிரச்சனையா? அல்லது செவ்வாய், ராகு, கேது போன்று ஏதாவது தோஷம் உள்ளதா?
நான் உங்களுக்கு மாப்பிள்ளை பார்கட்டுமா? எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்காங்க ஆனால் நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகிடுறீங்களா?
உங்கள் உடம்பில் வேறு ஏதாவது பிரச்சனையா? மருத்துவரை பார்த்தீர்களா?
உங்கள் வீட்டில் பணம் இல்லையா? அல்லது வேறு ஏதாவது கஷ்டம் இருக்கா?
நீங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சன்யாசியா போக போறீங்களா?
நீங்கள் சமூக சேவைகள் ஏதாவது செய்ய போறீங்களா?
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Average Rating