திருமணமாகாத 30+ பெண்களிடம் கேட்க கூடாத கேள்விகள்…!!
30 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்தால், திருமணம் செய்த மூன்று மாதத்தில் கருத்தரிக்காமல் இருந்தால், வீட்டில் வயதுக்கு வந்த பெண் ஒருத்தி இருந்தாலே போதும் இந்த சமூகம் அவர் மீது பல கேள்வி கணைகளை தொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
இந்த வகையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் 30 வயதை தாண்டி திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கும் பெண்கள். தயவு செய்து அவர்களிடம் இந்த கேள்விகளை கேட்டு, யாரும் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டாம்…
கேள்வி #1
இவ்வளோ வயசாகியும் ஏன் கல்யாணம் பண்ணிக்கல?
கேள்வி #2
லவ்வு, கிவ்வுன்னு ஏதாவது? லவ் ஃபெயிலியரா?
கேள்வி #3
ஜாதகத்துல ஏதாவது பிரச்சனையா? செவ்வாய், ராகு, கேது ஏதாவது தோஷம் இருக்கா?
கேள்வி #4
நான் வேணும்னா மாப்பிள்ளை பாக்கட்டுமா? எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்காரு, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாமே?
கேள்வி #5
உடம்பு கிடம்பு ஏதாவது சரியில்லையா? ஏதாவது டாக்டர பாத்தியா?
கேள்வி #6
வீட்டுல எதாச்சும் காசு பிரச்சனையா? கஷ்டமா என்ன?
கேள்வி #7
சன்யாசியா போக போறியா என்ன?
கேள்வி #8
சமூக சேவை செய்ய போறியா என்ன? இந்த வயசுல இப்படி தான் பல எண்ணம் வரும். நான் சொல்றத கேளு…
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Average Rating