14 வயதான பாடசாலை மாணவியை கடத்தி இளைஞர் செய்த காரியம்..!!
Read Time:1 Minute, 12 Second
14 வயதான பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சின்னாபடுவ பிரதேசத்தினை சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மதுரன்குலிய பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாணவி தற்போது கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Average Rating