சீனாவில் மீண்டும் நிலக்கரி சுரங்க விபத்து: 17 தொழிலாளர்கள் பலி…!!
சீனாவின் வடக்குப்பகுதியில் உள்ள தன்னாட்சி பிராந்தியம் இன்னர் மங்கோலியா. இங்குள்ள சிபெங் நகரில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால், தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
இவ்விபத்தில் 17 பேர் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது. மேலும் பலர் சுரங்கத்தினுள் சிக்கியிருப்பதால் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 21 பேர் பலியாகினர். சுரங்கத்தில் சிக்கிய ஒருவரைத் தேடி வருகின்றனர்.
Average Rating