பெருமளவான சிகரட்களுடன் இளைஞர்கள் இருவர் கைது..!!
Read Time:54 Second
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை சிகரட்களை கொண்டு சென்ற இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீர் கொழும்பு – பெரியமல்ல பகுதியல் வைத்தே குறித்த இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும், இவர்களிடமிருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிகரட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating