மதுஅருந்திவிட்டு மனைவியை தாக்கிய கணவருக்கு விளக்கமறியல்…!!
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவனை இம்மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று(06) உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவினை திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராசா வழங்கியுள்ளார்.
இந்த நபர் ஆராம்கட்ட பெரிய குளம், நிலாவெளிப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என கூறப்படுகின்றது.
சந்தேகநபரின் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகத்தில் மதுஅருந்திவிட்டு மனைவியை தாக்கி காயம் ஏற்படுத்தியதாக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து குறித்த இந்த நபரை கடந்த 05ஆம் திகதி இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை நேற்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Average Rating