ஏமனில் படகு கடலில் மூழ்கியது: 60 பேர் பலி?
Read Time:50 Second
உள்நாட்டு போர் நடந்து வரும் ஏமனில் ஹட்ராமாவ்த் பகுதியை சேர்ந்தவர்கள் படகு மூலம் கடலில் பயணம் செய்தனர். சொகோட்ரா தீவு அருகே சென்ற போது அந்த படகு திடீரென மாயமானது.
அதைத் தொடர்ந்து அப்படகை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது கிடைக்கவில்லை. எனவே அதில் பயணம் செய்த 60 பேரும் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே ஹட்ராமாவ்த் மாகாண கவர்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் படகில் பயணம் செய்த 2 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Average Rating