பெற்ற தாயை இரத்தம் சொட்ட சொட்ட அடித்து கொல்ல முயன்ற மகன்! மிகவும் துயரமான காட்சி…!! வீடியோ
இந்தியாவில் மகன் ஒருவன் பெற்ற தாயை அடித்துக் கொல்ல முற்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. நந்த் கிஷோர் என்ற நபரே தனது 70 வயது தாய் Rajindari Deviயை அடித்து கொல்ல முயன்றுள்ளார்.
சமூக ஆர்வலர் குந்தன் ஸ்ரீவஸ்தவா என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், குறித்த வீடியோவை பகிர்ந்ததன் மூலம் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நந்த கிஷோர் தினமும் தனது தாயை அடித்து கொடுமைப்படுத்தி அவரிடமிருந்து வாடகை பணத்தை பிடுங்கி வருவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து Rajindari Devi காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர், மகன் அளித்த நெருக்கடியால் புகாரை திருப்பி வாங்கியுள்ளார்.
சமூக ஆர்வலர் குந்தன் ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள பதிவில், பாதிக்கப்பட்ட தாயை மீட்டு, மகனுக்கு தக்க தண்டனை அளிக்கும் படி டெல்லி அரசை வலியுறுத்தியுள்ளார்.
Average Rating