நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சிருஷ்டி டாங்கே…!!
‘காதலாகி’ தொடங்கி ‘தர்மதுரை’ வரை பல படங்களில் சிருஷ்டி டாங்கே நடித்து இருக்கிறார். இப்போது, ‘முப்பரிமாணம்’, ‘பொட்டு’, ‘காலக்கூத்து’, ‘சத்ரு’, ‘சரவணன் இருக்க பயமேன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தான் நடிக்கும் படங்கள் குறித்து நடிகை சிருஷ்டி டாங்கே கூறுகையில் “இது வரை நான் நடித்த படங்கள் எனக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. விஜய் சேதுபதியுடன் நான் நடித்த ‘தர்மதுரை’ படத்தில் என்னுடன் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்தனர். இந்த படத்தில் நான் சிறிது நேரம் தான் வந்தேன். என்றாலும், எனது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. அந்த பாத்திரம் ரசிகர்கள் மனதை தொட்டது.
இப்போது ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தில் நானும் ரெஜினாவும், உதயநிதி ஜோடியாக நடிக்கிறோம். கதைப்படி, இதிலும் எனக்கு ‘தர்மதுரை’ போன்ற அழுத்தமான பாத்திரம்.எனவே இந்த படத்திலும் எனது பாத்திரமும், நடிப்பும் பேசப்படும். இதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன் அடுத்து வரும் படங்களும் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடிக்க வழிவகுக்கும்” என்றார்.
Average Rating