கருமத்தம்பட்டி அருகே இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சூப்பர் வைசர் கைது…!!

Read Time:1 Minute, 29 Second

201612151711450827_young-girl-tried-misbehave-with-super-visor-arrested_secvpfகோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் நவீன்குமார். இவரது மனைவி நித்யா (வயது 21). குழந்தைகள் இல்லை.

இந்தநிலையில் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு நவீன்குமார் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். கணவர் இறந்ததால் நித்யா தனியாக வசித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த நித்யா பாத்திரங்களை கழுவிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (25) கைத்தறி கூடத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். நித்யாவிடம் வந்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த நித்யா சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் நாகராஜ் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து நித்யா கருமத்தம் பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நாகராஜை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்விரோத தகராறு: கோவில் தர்மக்கர்த்தாவின் காதை கடித்து துப்பிய ஆசாமி…!!
Next post சூர்யா இடத்தை பிடித்த விஷால்…!!