30 மாணவிகளின் கற்பை சூறையாடி டியூசன் ஆசிரியர் சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்…!!

Read Time:9 Minute, 39 Second

201612161314146664_dhamapuri-30-girl-students-molested-case-tuition-centre_secvpfடியூசன் சென்டருக்கு படிக்க வரும் மாணவிகளுக்கு பாடம் சொல்லி கொடுக்காமல் அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பை சூறையாடிய சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

30-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஆபாச படம் எடுத்து அவர்களை மிரட்டி உல்லாசமாக இருந்ததாக டியூசன் சென்டர் உரிமையாளர் சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ஈஸ்வரன், செல்போன் கடை உரிமையாளரான மற்றொரு சிவக்குமார் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மாணவிகளுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று டியூசன் சென்டர் உரிமையாளரும், முதல் குற்றவாளியுமான சிவக்குமாரை 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் பாலக்கோட்டில் உள்ள டியூசன் சென்டருக்கும் அழைத்து சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆபாச படங்கள் அடங்கிய மேலும் ஒரு மெமரி கார்டும் போலீசாரிடம் சிக்கியது. இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு-

பாலக்கோட்டில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளின் கற்பு சூறையாடப்பட்ட டியூசன் சென்டர் அங்குள்ள ஒரு கட்டிடத்தில் முதல் மாடியில் கடந்த 4 வருடங்களாக இயங்கி வந்தது.

அங்கு மாணவ- மாணவிகளுக்கு முதலில் உள்ள ஒரு பெரிய அறையில் வைத்து சிவக்குமார் டியூசன் எடுத்தார். அதன் அருகில் சிறிய அறை ஒன்றும் இருந்தது.

மாணவிகளுக்கு குளிர் பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர்கள் மயங்கிய பின்னர் அந்த சிறிய அறையில் வைத்து சிவக்குமார் அவர்களிடம் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். அதனை வீடியோவாகவும் செல்போனில் பதிவு செய்த அவர் சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் அதனை காட்டி அடிக்கடி மிரட்டி உல்லாசமாக இருந்தார்.

அந்த காட்சிகளையும் ரகசியமாக செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அதனை இரவு நேரங்களில் தனியாக இருக்கும் போது அடிக்கடி பார்த்து ரசித்து வந்தார். இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாணவி என 30-க்கும் மேற்பட்டோரிடம் உல்லாசம் அனுபவித்தார்.

டீயூசன் சென்டரில் வேலை பார்த்த அவரது நண்பரான மற்றொரு சிவக்குமார் அந்த கட்டிடத்தின் தரை தளத்தில் செல்போன் கடை வைத்துள்ளார். அவரிடம் டியூசன் சென்டர் உரிமையாளர் சிவக்குமார், ஒரிஜினல் ஆபாச படங்கள் தன்னிடம் உள்ளது அதனை பார்க்கிறாயா? என்று கேட் டார். அவரும் உடனே அந்த படங்களை காட்டுமாறு நண்பரிடம் கெஞ்சினார்.

இதையடுத்து தனது செல்போனில் இருந்த ஆபாச படங்களை நண்பர் சிவக்குமாருக்கும் டியூசன் சென்டர் உரிமையாளர் செல்போனில் அனுப்பினார். அதனை திரும்ப, திரும்ப போட்டு பார்த்த அந்த சிவக்குமார் அதில் இருக்கும் மாணவிகளை அடையாளம் கண்டார்.

பின்னர் ஆபாச படத்தில் இருக்கும் மாணவிகளிடம் செல்போன் கடை உரிமையாளர் சிவக்குமாரும் நைசாக பேசினார். நேரம் கிடைக்கும் போது சம்பந்தப்பட்ட மாணவிகள் உல்லாசமாக இருக்கும் ஆபாச படங்களை அவர்களிடமே காட்டினார்.

இதனால் அதிர்ச்ச்சியில் உறைந்து போன மாணவிகளை தன் வசப்படுத்திய செல்போன் கடை உரிமையாளர் சிவக்குமாரும் அந்த மாணவிகளிடம் உல்லாசம் அனுபவித்தார். இதே போல ஈஸ்வரனும் மாணவிகளிடம் உல்லாசமாக இருந்தார்.

இதற்கிடையே செல்போன் கடை உரிமையாளர் சிவக்குமார் தனது நண்பர்கள் பலருக்கும் அந்த ஆபாச படங்களை செல்போனில் அனுப்பினார்.

அதனை பார்த்த மாணவிகளின் உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு தெரிந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னரே ரகசியமாக 2 ஆண்டுகள் அரங்கேறிய இந்த சம்பவம் கொஞ்சம், கொஞ்சமாக வெளியில் கசிந்து போலீசாரின் காதுக்கு எட்டியுள்ளது.

மேலும் கடந்த 2014-ம் ஆண்டு பாலக்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒரு பாடம் பெயிலானதால் இங்கு டியூசன் படிக்க சேர்ந்தார். அந்த மாணவியிடமும் டியூசன் சென்டர் உரிமையாளர் சிவக்குமார் அடிக்கடி பேசி பழகினார்.

பின்னர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடமும் உல்லாசம் அனுபவித்தார் . அதனையும் தனது செல்போனில் படம் பிடித்து அந்த மாணவியிடம் காட்டி மிரட்டி தான் நினைக்கும் போதேல்லாம் உல்லாசமாக இருந்தார்.

டியூசன் சென்டரில் படித்து விட்டு வெளியில் சென்ற பிறகும் அந்த மாணவியிடம் செல்போனில் பேசிய அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் அந்த மாணவி சிவக்குமாரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை.

இதற்கிடையே அந்த மாணவிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தகவலை அறிந்த சிவக்குமார் ஆத்திரம் அடைந்தார். மேலும் அவரை பழி வாங்க திட்டமிட்டார்.

அதற்காக அந்த மாணவியுடன் உல்லாசமாக இருந்த ஆபாச காட்சிகளை தனது நண்பரான சிவக்குமார் மூலம் பலருக்கும் அனுப்பினார். இதை அறிந்த அந்த மாணவி தன்னை ஆபாசமாக சித்தரித்து செல்போனில் படங்களை வெளியிடுவதாக அவரது பெற்றோரிடம் கூறி கதறினார்.

அதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த அவரது பெற்றோரும் தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ளனர். பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாவாயி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனால் இந்த வழக்கு தற்போது மேலும் சூடு பிடித்துள்ளது.

போலீஸ் கஸ்டடியில் உள்ள சிவக்குமாரிடம் போலீசார் இன்று மாலை வரை அதிரடி விசாரணை நடத்துகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் அவரை சிறையில் அடைக்கிறார்கள்.

இந்த வழக்கில் டியூசன் சென்டரில் ஆசிரியராக பணிபுரிந்த ஈஸ்வரனை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அதற்காக வருகிற திங்கட்கிழமை கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அவரிடம் முழு விசாரணை நடத்தும் போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் இதில் தொடர்புடைய பலரும் கலக்கத்தில் உள்ளனர்.

தர்மபுரியில் திருப்பத்தூர் சாலையில் செயல்பட்டு வந்த சிவக்குமாரின் மற்றொரு டியூசன் சென்டர் கடந்த 10 நாட்களாக பூட்டியே கிடக்கிறது. அந்த டியூசன் சென்டர் குறித்தும் அக்கம் பக்கத்தில் தர்மபுரி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இதனால் அங்கும் பரபரப்பு நிலவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்தில் 3 பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கீகாரம்…!!
Next post ஜோலார்பேட்டை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…!!