ஜேர்மனியில் 12 பேர் மீது லொறி ஏற்றி கொன்றது நாங்கள் தான்! அதிர்ச்சியளித்த ஐ.எஸ் இயக்கம்…!!

Read Time:1 Minute, 51 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1ஜேர்மனியின் பெர்லின் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தைக்குள் வாகனத்தை மக்கள் மீது ஏற்றி கொலை செய்த சம்பவத்துக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

ஜேர்மனி நாட்டின் பெர்லின் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் நேற்று அதிவேகமாக வந்த டிரக் லொறி ஒன்று மக்கள் கூட்டத்தில் புகுந்தது.

இந்த விபத்தில் உடல் நசுங்கி 12 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் குற்றமற்றவர் என தெரிந்ததால் பொலிசார் அவரை விடுவித்தனர்.

இந்நிலையில், இந்த கோர தாக்குதலுக்கு தற்போது ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த செயலை செய்தவர்களை விரைவில் பிடிப்போம் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கடந்த ஜூலை 14ம் திகதி நைஸ் நகரில் நடந்த சுதந்திர தின கொண்டாட்ட கூட்டத்தில் லொரி ஏற்றி 86 பேர் கொல்லப்பட்டதற்கும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூட்டமைப்பின் திரிசங்கு நிலை…!! கட்டுரை
Next post வெடித்துச் சிதறிய கொலம்பிய விமானம்…!!