தர்மபுரியில் மாணவிகளை சீரழித்த ஆசிரியர் உள்பட 3 பேருக்கு மருத்துவ பரிசோதனை..!!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் ஈஸ்வரன் (26), செல்போன் கடை அதிபரான இன்னொரு சிவக்குமார் (23) ஆகியோருடன் இணைந்து தளிர் என்ற பெயரில் டியூசன் சென்டர் நடத்தி வந்தார்.
இந்த டியூசன் சென்டர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தர்மபுரி மற்றும் பாலக்கோட்டில் இயங்கி வந்தது. இங்கு பயிற்சிக்கு வந்த 25-க்கும் மேற்பட்ட மாணவிகளை மிரட்டி பலாத்காரம் செய்தனர். இதில் ஒரு மாணவியை மிரட்டி கற்பழித்து அதை வீடியோ எடுத்து பரப்பியபோது வெளியே தெரியவந்தது.
அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டு தர்மபுரி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கும், கைதான 3 பேருக்கும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது.
இந்த நிலையில் பாலக்கோட்டில் உள்ள டியூசன் சென்டரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு ரகசிய படுக்கை அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அறையில் இருந்து செக்ஸ் மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
Average Rating