திருச்சி அருகே ஒரே குடும்பத்தில் 5 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி…!!

Read Time:1 Minute, 45 Second

201612241451493170_trichy-near-5-person-suicide-attempt_secvpfதிருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள யாகபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). திருச்சியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி (35). இவர்களுக்கு ‌ஷர்மிளா (7), ஷார்வதா(6), என்ற 2 மகளும் , சபரிதாசன்(2½) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று மாலை 5 பேரும் வீட்டிற்குள் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் உடனடியாக 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

5 பேரும் எதற்காக வி‌ஷம் குடித்தனர் என்று தெரியவில்லை.குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவியும் சேர்ந்து குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனரா? அல்லது ஏழ்மை காரணமாக வி‌ஷம் குடித்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 5 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கன்னியகோவில் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளிக்கு தர்ம அடி…!!
Next post பராமரிப்பவர்களிடம் நோயாளிகள் படும் அவஸ்தை… பலவீனமானவர்கள் பார்க்கத் தடை…!! வீடியோ