வீடில்லாத நபருக்கு நடந்த பயங்கரம்: தீ வைத்து கொளுத்திய அகதிகள்…!!
ஜேர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் ரயில் நிலையம் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.
அந்த ரயில் நிலையத்துக்கு வந்த ஏழு பேர் கொண்ட அகதிக் கும்பல் அங்கு வீடில்லாமல் பிளாட்பாரத்தில் படுத்திருந்த ஒரு 37 வயது மதிக்கத்தக்க ஆணின் உடையில் நெருப்பை வைத்து கொளுத்தியுள்ளனர்.
இதில் வலியால் துடித்த அந்த நபரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், இந்த செயலில் ஈடுப்பட்டவர்களை CCTV கமெரா காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு கைது செய்துள்ளோம்.
அந்த ஏழு பேரும் 15லிருந்து 21வயதுக்குட்பட்டவர்கள் தான் என கூறியுள்ள பொலிசார் அவர்கள் சிரிய நாட்டிலிருந்து இங்கு வந்து வாழ்வதாகவும் கூறியுள்ளனர்.
இதனிடையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த நபருக்கு அதிகளவில் பெரிய காயங்கள் ஏற்படவில்லை எனவும், அவர் உடமைகள் தான் அதிகளவு தீக்கிரையாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Average Rating