20 வருடங்களாக மனைவியுடன் பேசுவதை தவிர்த்த நபர் 18 வயது மகனின் முயற்சியால் மீண்டும் உரையாடுகிறார்..!! (வீடியோ)
ஜப்பானைச் சேர்ந்த நபர் ஒருவர், 20 வருடங்கள் தனது மனைவியுடன் பேசுவதை தவிர்த்து வந்தநிலையில், அண்மையில் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார்.
ஒட்டோவ் கேட்டேயமா எனும் இந் நபர் தனது மனைவியுடன் தொடர்ந்து வசித்து வந்தார். ஆனால், 20 வருட காலமாக இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை.
யுமி கூறிய ஏதோ ஒரு விடயம் தன்னை வெகுவாக பாதித்ததால் அவருடன் பேசுவதை கேட்டேயமா நிறுத்தினாராம். அவரின் மனைவி கேட்டேயமாவுடன பேசுவதற்கு முற்பட்டபோதிலும் கேட்டேயமா இதை விரும்பவில்லை.
ஆனால், இவர்கள் தொடர்ந்தும் ஒரே வீட்டில் தம்பதிகளாக வசித்து வந்தனர். இவர்களுக்கு 18 வயதான மகனும் இரு மகள்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜப்பானிய தொலைக்காட்சி நிறுவனமொன்றை தொடர்பு கொண்ட 18 வயதான யோஷிகி, தனது தந்தையும் தாயும் உரையாடுவதை ஒருபோதும் தான் செவிமடுத்ததில்லை எனக்கூறி இவ் விடயத்தில் உதவுமாறு கோரினார்.
அதன்பின் அத் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார் கேட்டேயமா. தனது மனைவி பிள்ளைகள் மீது அதிக அக்கறை காட்டுவதால் தான் பொறாமையடைந்ததாக கேட்டேயமா கூறியுள்ளார்.
எனினும், யுமி, இவ்வளவு காலமாக நீங்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளீர்கள். அனைத்து விடயங்களுக்காகவும் நான் கடமைப்பட்டுள்ளேன் என தனது மனைவி யிடம் கேட்டேயமா கூறியுள்ளார்.
Average Rating