செல்பி மோகத்தால் ஆற்றில் விழுந்து பலியான மாணவி..!!
உத்தரகாண்ட் மாநிலம், கர்வால் மாவட்டம், பவுரி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவ-மாணவியர் சிலர் கல்வி சுற்றுலாவாக நேற்று ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கோட்டேஷ்வர் கோயிலை சுற்றிப் பார்க்க வந்திருந்தனர்.
ஆலய தரிசனம் முடிந்த பின்னர் அனைவரும் அருகாமையில் உள்ள புனித நதியான அலக்நந்தா ஆற்றங்கரை ஓரமுள்ள ஒரு குகை பகுதிக்கு சென்றனர். அப்போது, ஆற்றின் கரையோரத்தில் நின்று தனது கைபேசியால் ‘ஸ்டைலாக’ செல்பி எடுக்க முயன்ற ஆஷ்னா பண்டாரி என்ற மாணவி, கால் தடுமாறி ஆற்றில் விழுந்தார்.
இதை கண்டு உடன் வந்த மாணவிகள் பீதியால் கூச்சலிட்டனர். ஆற்றில் பாய்ந்தோடிய வெள்ளத்தில் சிக்கிய மாணவி சில வினாடிகளில் நீரின் ஓட்டத்தோடு இணைந்து காணாமல் போனார். மாணவிகளின் கூச்சலை கேட்டு உதவிக்கு ஓடிவந்த நபர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து, மீட்பு படையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட மாணவியின் உடலை தேடி வருகின்றனர்.
Average Rating