பீகாரில் படகு விபத்தில் 24 பேர் பலி..!!
இந்தியாவின் பீகார் தலைநகர் பட்னாவிற்கு அருகே கங்கை நதியில் நேற்று இரவு இடம்பெற்ற படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.
பீகார் தலைநகர் பட்னாவிற்கு அருகே கங்கை நதியில் நேற்று மாலை படகு ஒன்று அனர்த்தத்திற்கு உள்ளானது.
இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.
குறிப்பிட்ட படகில் சுமார் 40 பேர் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகர சங்கராந்தி விழாவை கொண்டாடி விட்டு அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த நிலையில் பீகார் படகு விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தங்களது ஆழ்ந்த இரங்கலை டிவிட்டர் செய்தி வழியாக தெரிவித்துள்ளனர்.
Average Rating