12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்கள்..!!
பீகார் மாநிலம் ஜெகனாபாத் அருகே உள்ள அரசுப்பள்ளியில் படித்துவரும் 12 வயது சிறுமி பள்ளிக் கட்டிடத்தில் தனியாக இருக்கும் போது, அப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் அச்சிறுமியை கட்டிடத்தின் மேல் பகுதிக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அந்தச் சிறுமியின் தாயார், சிறுமியைத் தேடி வந்த போது அலங்கோலமான நிலையில் மாடியில் கிடந்துள்ளார். தனது தாயிடம் நிகழ்ந்த சம்பவத்தை எடுத்துக் கூறியுள்ளார்.
உடனே, அந்தச் சிறுமியின் தாயார் காவல் நிலையம் சென்று புகாரளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்தச் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில், அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் அஜு அகமது மற்றும் அதுல் ரகுமான், அப்துல் பாரி, ஷகாவுத் ஆகிய மூன்று ஆசிரியர்கள் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேற்கண்ட நான்கு பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
நேற்று வார விடுமுறை நாள் என்றாலும், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பள்ளி உள்ளூர் விடுமுறை விடப்பட்டதற்கு பதிலாக ஞாயிறு அன்று பள்ளி இயங்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating