செல்பி மோகத்தால் பரிதாபமாக பலியான இரு இளைஞர்கள்..!!
Read Time:1 Minute, 2 Second
தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க சென்ற இரண்டு இளைஞர்கள் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர்.
இந்தியா டெல்லியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த இளைஞர்கள் மேலும் சிலருடன் புகையிரதம் வரும் போது செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர்.
எனினும் இதன்போது புகையிரதம் நெருங்கிய வரும் வேளை மற்றைய இளைஞர் தண்டவாளத்தை விட்டு விலகியுள்ள நிலையில், இந்த இரண்டு இளைஞர்களும் தாமதமாகியுள்ளனர்.
இதன்போது புகையிரதத்தில் மோதி அந்த இரண்டு இளைஞம் பலியாகியுள்ளனர்.
செல்பி மோகத்தால் உலகில் ஏற்படும் மரணங்களில் அதிகளவு இந்தியாவில் இடம்பெறுவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
Average Rating