குழந்தையுடன் களத்தில் இறங்கி போராடும் சிவகார்த்திகேயன்..!! (வீடியோ)
Read Time:57 Second
ஜல்லிகட்டுக்கை மீட்டெடுப்பதன் மூலம் நம் உரிமைக்காக தமிழக இளைஞர்கள் கடந்த ஐந்து நாட்களாக வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். பணக்காரர்கள், ஏழைகள், பிரபலங்கள், குழந்தைகள் என பாகுபாடு இல்லாமல் உலகமே திரும்பிப்பார்க்கும் வகையில் ஒரு அறவழி போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று நடிகர் சங்கம் சார்பாக நடைபெற்ற போராட்டத்திலும் கலந்துகொண்டார். அதற்குமுன்பு மெரீனாவில் இளைஞர்களுடனும் போராட்டத்தில் பங்கேற்றார். இவரது குழந்தை ஆராதனாவும் போராட்டத்தில் பங்கேற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Average Rating