படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தரின் உடல் 12 நாட்களின் பின் அடக்கம்..!!
Read Time:1 Minute, 21 Second
வவுனியாவில் கொடுரமாக கொலைசெய்யப்பட்ட குடும்பஸ்தரான பாலரஞ்சன் பாலநிசாந்தன் வயது (28) என்பவரின் உடல் 12 நாட்களின் பின் இன்று 22-01-2017 அடக்கம் செய்யப்பட்டது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது
கடந்த 11-01-2017 அன்று வீட்டில் நித்திரையாக இருந்த போது கோடாலியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தையான பாலநிசாந்தனின் உடல் கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. பாலநிசாந்தனின் தாயார் வெளிநாட்டிலிருந்து வருவதற்காக காத்திருந்த உடலம் அவர் வரமுடியாத ச10ழ்நிலையிலேயே இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பாலநிசாந்தனை படுகொலை செய்ததாக சந்தேகப்படும் சந்தேக நபர் தப்பி ஓடிவிட்ட நிலையில் 12 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் பொலிசார் சந்தேக நபரை கைதுசெய்யவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating