பாகிஸ்தானில் ராணுவம்-பழங்குடியினர் மோதல்: 60 பேர் பலி

Read Time:1 Minute, 6 Second

Pakistan.Map.2.jpgபாகிஸ்தானில் பலுசிஸ்தான் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், 60 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் தென்மேற்குப் பகுதியில் பலுசிஸ்தான் நகரப் பகுதி உள்ளது. இங்கு ராணுவம்}பழங்குடியின மக்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில், பழங்குடியினத் தலைவர் அக்பர் ராணுவத்தால் கொல்லப்பட்டார். மேலும், 40 பழங்குடியினத்தவர்களும் உயிரிழந்தனர். இந்த மோதலில் 20 ராணுவத்தினரும் பலியாகினர்.

பழங்குடியினத் தலைவர் கொல்லப்பட்டதால் ஆவேசமடைந்த மக்கள் பலுசிஸ்தானில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புளூட்டோவின் கிரக அந்தஸ்து பறிப்பு: வானியல் அறிஞரின் மனைவி அதிர்ச்சி
Next post அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கி 49 பேர் பலி