கல்லறையில் வைத்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்..!!
இங்கிலாந்தில் உள்ள கல்லறை ஒன்றில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள செடல் என்ற கிராமத்தில் புனித.மரியாள் தேவாலயம் அமைந்துள்ளது.இந்நிலையில், நேற்று பெயர் வெளியிடப்படாத இளம்பெண் ஒருவர் பொலிஸாரிடம் குறித்த ‘தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறையில் தன்னை ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் மக்கள் யாருமில்லாத அதிகாலை நேரத்தில் நிகழ்ந்ததாகவும் குறித்த இளம்பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பெண்ணின் முறைப்பாட்டினை பெற்ற பொலிஸார் கல்லறைக்கு சென்று அப்பகுதி முழுவதையும் சீல் வைத்து அடைத்தனர். பின்னர், தடவியல் நிபுணர்களை வரவழைத்து ஆதாரங்களை சேகரித்தனர்.இதன்போது பொலிஸாருக்கு சில ஆதாரங்கள் கிடைத்திருந்தாலும் அவற்றை தற்போது வெளியிட முடியாது என மறுத்துவிட்டனர்.
தேவாலய கல்லறையில் இளம்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மர்ம நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Average Rating