திருநங்கையை மணமுடித்த இளைஞன்..!!

Read Time:1 Minute, 24 Second

sasதிருநங்கை ஒருவரை ஆண் ஒருவர் முறைப்படி திருமணம் செய்துகொண்ட சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒடிசா தலைநகர் புவனேஷ்வரை சேர்ந்த பாசுதேவ் நாயக் என்ற இந்து மணமகன், திருநங்கையான மேனகா கன்னர் என்பவரை முறைப்படி தாலிகட்டி தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியுள்ளார்.

மனித பிறப்பில் மூன்றாம் பாலினத்தவராக அடையாளம் காணப்படும் திருநங்கைகள் தான் பிறந்த குடும்பத்தாலேயே விளக்கி வைக்கப்படும் துயரத்தை எதிர்கொள்ளும் சமூகமாக உள்ளனர்.

மேலும் தம்மை ஒத்த திருநங்கைகள் உடனேயே இவர்களின் உறவுகள் இருந்து வரும் நிலையில் குறித்த திருமணம் இடம்பெற்றுள்ளது.

மணமகன் ஒருவருக்கும் திருநங்கைக்கும் இடையே திருமணம் நடந்துள்ளமை, அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வித்தியாசமான திருமணத்தில் ஏராளமான திருநங்கைகள் கலந்துகொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹெலிகாப்டர் வசதியுடன் அதிநவீன சொகுசு பஸ்..!! (வீடியோ)
Next post சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் நலன்கள்..!! (கட்டுரை)