துப்பாக்கி முனையில் பெண் கற்பழிப்பு..!!
திருவனந்தபுரத்தை அடுத்த பத்தினம் திட்டை, மரடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண், மனைவியை பிரிந்து வாழ்ந்த தனது நண்பருடன் ஒரே வீட்டில் வசிக்க தொடங்கினார். இந்த தகவல் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிய வந்தது. என்றாலும் அவர்கள் இதைக்கண்டு கொள்ளவில்லை.
அந்த பெண்ணின் வீட்டிற்கு அவருடன் சேர்ந்து வாழ்ந்தவரின் நண்பர்களும் வந்து செல்வது வழக்கம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்தவர் வியாபார விஷயமாக வெளியே சென்றார். வீட்டில் அந்த பெண் மட்டும் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் பெண்ணின் வீட்டிற்கு சென்றனர்.
அவர்கள் அந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்தனர். அவர், மறுத்து கூச்சலிட்டார். உடனே அந்த வாலிபர்கள் துப்பாக்கியை காட்டி அந்த பெண்ணை மிரட்டினர். பின்னர் அவர்கள் துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை மாறி மாறி கற்பழித்தனர்.
இதுபற்றி அந்த பெண், தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த நண்பரிடம் கூறி அழுதார். அவர், இச்சம்பவம் பற்றி மரடு போலீசில் புகார் செய்தார். அதில், பத்தினம் திட்டை பகுதியைச் சேர்ந்த அருண் (வயது 20), நாசர் (24) ஆகியோர் பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி கற்பழித்து விட்டதாகவும் இதனை செல்போனில் பதிவு செய்து மிரட்டி வருவதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறி இருந்தார்.
போலீசார் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், அந்த பெண் கற்பழிக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் வாலிபர்கள் அருண், நாசர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
Average Rating