மைதானத்தை முற்றுகையிட்ட தேனீக்கள்! இலங்கை – தென்னாபிரிக்கா கிரிக்கெட் போட்டி பாதிப்பு..!!
Read Time:1 Minute, 5 Second
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இந்த நிலையில் போட்டியின் இடையில் தேன் பூச்சிகள் இடையூறு ஏற்படுத்தியுள்ளன. இதனால் போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மைதானத்தை முழுமையாக சூழ்ந்து கொண்ட தேனீக்களால் இரு அணி வீரர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போட்டி இடைநிறுத்தப்பட்ட போது இலங்கை அணி 26.3 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களை எடுத்திருந்தது.
Average Rating