பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய ஆசிரியர்..!!

Read Time:2 Minute, 15 Second

201702061837177719_Meghalaya-teacher-blackmailed-girl-for-years-accused-of-rape_SECVPFமேகாலயா மாநிலத்தில் தலைநகர் ஷில்லாங் அருகே ஷிகாங் என்ற கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த 18 வயது மாணவியை, அப்பள்ளியைச் சேர்ந்த கொனேஷான் ரோத்போம் என்ற ஆசிரியர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், பள்ளி வளாகத்தில் வைத்து பின்தொடர்ந்து சென்றுள்ளார். மறைவான இடத்தில் வைத்து வல்லுக்கட்டாயமாக அம்மாணவியை முத்தமிட்ட ஆசிரியர் ரோத்போம், பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளார். மேலும், அச்சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ பதிவைக் கொண்டு கடந்த ஒரு வருடமாக அம்மாணவியை மிரட்டி வந்த ஆசிரியர், தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளாவிட்டால், வீடியோவை வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில், பெண்கள் உரிமைக்கான தன்னார்வ அமைப்பு ஒன்றின் பிரதிநிதிகள் அந்த பள்ளிக்கு வருகை தந்து மாணவிகளிடம் கலந்துரையாடியுள்ளனர். அப்போது பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தனக்கு நேர்ந்த அவலத்தை தன்னார்வ அமைப்பின் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார்.

மாணவியின் குற்றச்சாட்டால் அதிர்ந்து போன அப்பிரதிநிதிகள், உடனே போலீசாருக்கு தகவலளித்தனர். புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்த விசாரணையில் தீவிரமாக இறங்கினர். ஆனால், போலீசாரின் விசாரணையை தெரிந்து கொண்ட அந்த ஆசிரியர் தப்பி ஓடிவிட்டார்.

தப்பி ஓடிய ஆசிரியரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மையே, கால்கள் அகற்றப்படவில்லை: மருத்துவர்கள் விளக்கம்..!!
Next post நிலப்பிரச்சினையும் எச்சரிக்கை மணியும்..!! (கட்டுரை)