ரெயிலில் தன்னைத் தானே தீ வைத்துக்கொண்டு ஓடிய தீவிரவாதி? 17 பேர் படுகாயம்..!! அதிர்ச்சி வீடியோ

Read Time:2 Minute, 31 Second

625.0.560.320.500.400.194.800.668.160.90ஹாங்காங்கில் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன்னைத்தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவத்தால் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹாங்காங்கின் மிகவும் பரபரப்பாக காணப்படும் Tsim Sha Tsui ரெயில்வே சுரங்கப்பாதையில் காலை நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் பணிகளுக்கு செல்வதற்காக ரெயிலுக்காக காத்திருந்தனர்.

குறித்த ரெயிலில் ஏரளமானோர் ஏறியுள்ளனர். அப்போது அங்கிருந்த பயணிகளுக்கு கரும்புகையின் வீச்சு ஏற்பட்டுள்ளது, அதன் பின்னர் பிளாஸ்டிக் எரிந்தால் எப்படி ஒரு வாசம் வருமோ அது போன்று வாசனை வந்துள்ளது.

இதனால் அனைவரும் உடனடியாக ரெயிலில் இருந்து வெளியேற முற்பட்ட போது, ரெயிலில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன் உடல் தீ பிடித்த நிலையில் ரெயிலின் உள்ளே இருந்து கத்திய படி வெளியே வந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அனைவரும் தீவிரவாதி என மிரண்டு கூச்சலிட்ட படி அலறி அடித்து ஓடியுள்ளனர். இதனால் 17 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

ரெயில் நிலையத்தில் தீவிரவாதி இருப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அவருக்கு முதலுதவி அளித்து விட்டு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர் தீவிரவாதி இல்லை என்றும் அவரது பெயர் Cheung எனவும் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்காக அவர் பெட்ரோல் குண்டை உபயோகித்துள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)

625.0.560.320.500.400.194.800.668.160.90 (2)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயில் நிலையத்தில் வைத்து 17 வயது சிறுமியை கற்பழித்த அகதி! சுவிஸ் நீதிமன்றம் அதிரடி தண்டனை..!!
Next post அனைத்து சரும பிரச்சனைகளையும் போக்கும் வாசனை குளியல் பொடி..!!