பெண் பொலிஸை கூட்டாக கற்பழித்த 5 பொலிஸ் அதிகாரிகள்..!!
மெக்சிகோவில் தங்களுடன் பணிபுரியும் பெண் பொலிஸ் அதிகாரியை ஐந்து ஆண் பொலிஸ் அதிகாரிகள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டின் Tabasco மாநிலத்தில் உள்ள பொலிஸ் அகாடமியில் பல பொலிசார் தங்கியுள்ளார்கள்.
கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அங்கு தங்கியிருந்த ஒரு பெண் பொலிஸ் அதிகாரியின் அறைக்கு சென்ற ஐந்து அதிகாரிகள் அந்த பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக போதை பொருட்களை வாயில் திணித்துள்ளனர்.
பின்னர் ஐந்து அதிகாரிகளும் சேர்ந்து கூட்டாக அந்த பெண்ணை கற்பழித்துள்ளனர். இது சம்மந்தமான வீடியோவை அப்போது அவர்கள் எடுத்துள்ளனர்.
இந்த விடயத்தை அவமானம் கருதி வெளியில் இத்தனை நாட்கள் சொல்லாமல் இருந்து வந்த பாதிக்கப்பட்ட பெண் தற்போது அவர் கற்பழிக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் கசிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே இது குறித்து அவர் புகார் அளிக்க ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Average Rating