கொடூர காட்சியை தைரியமாக பதிவு செய்து வெளியிட்ட பெண்..!! வீடியோ
நோர்வே காட்டுப்பகுதியில் ஆயிரக்கணக்கான புழுக்கள் இறந்த கன்றுக்குட்டியை சாப்பிட்ட காட்சி வீடியோவாக வெளியாகி சிலிர்க்க வைத்துள்ளது.
குறித்த சம்பவத்தை பெண் ஒருவர் மூன்று நாட்களாக வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
பெயர் வெளியிடாத பெண் தன் வீட்டிற்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது இறந்து கிடந்த கன்றுக்குட்டியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
சுமார் ஆயிரக்கணக்கான புழுக்கள் இறந்த கன்றுக்குட்டியை சாப்பிட்டுக்கொண்டிருந்தது. இதை கண்டு பயந்து ஓடாத அந்த பெண் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
சுமார் மூன்று நாட்களாக அவர் வீடியோ பதிவு செய்துள்ளார். இறுதியில் கன்றுக்குட்டியின் மண்டை ஓடு மற்றும் எலும்புகளே மீதம் இருந்துள்ளது.
இந்த கொடூர காட்சியை கண்ட பலர் இதுபோன்ற ஒன்றை தனது வாழ்வில் பார்த்ததே இல்லை என கருத்து தெரிவித்துள்ளார்.
Average Rating