8 மில்லியன் பார்வையாளர்களை கடும் கோபத்தில் ஆழ்த்திய வீடியோ..!!
சீனாவில் தாய் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் தனது குழந்தையை பந்தை போன்று எட்டி உதைத்து தூக்கிய வீசிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளவாசிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் Guangdong மாகாணத்தை சேர்ந்த Chen என்பவர், அழுதுகொண்டிருக்கும் தனது குழந்தையை காலால் எட்டி உதைக்கிறார். அதன் பின்னர் தனது கைகளால் அதனை தூக்கியெறிகிறார்.
வலி தாங்க முடியாமல் குழந்தை வீறிட்டு அழுகிறது. இதனை அருகில் இருக்கு நபர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை 8 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். பெற்றெடுத்த குழந்தையை ஒரு தாய் இரக்க மனமில்லாமல் தாக்கும் இந்த காட்சியை பார்த்த சமூகவலைதளவாசிகள் அப்பெண்மணியை மோசமாக திட்டியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வீடியோவானது பொலிசாரின் கவனத்திற்கு சென்றதையடுத்து, அப்பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில், தான் கடந்த நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் என்னால் எவ்வித வேலையையும் சரியாக செய்ய முடியவில்லை.
இந்த சூழ்நிலையில், எனது குழந்தை வேறு அழுது என்னை கோபத்திற்கு ஆளாக்கியது. இதனால், மிக மோசமாக நடந்துகொண்டேன் என்றும் இந்த செயலுக்கு வருக்துகிறேன் எனவும் கூறியுள்ளார்.
இதனை கேட்டு பொலிசார், அப்பெண்ணை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
Average Rating