உலகின் மிக கொடூர முகம் கொண்ட மனிதர்! உருக வைக்கும் வீடியோ..!!

Read Time:2 Minute, 14 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)உலகின் மிக மோசமான நோயால் பாதிக்கப்பட்ட நபர் தற்போது பல அறுவை சிகிச்சைக்கு பின்னர் கிட்டதட்ட ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வரும் சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

ஹுனான் மாகாணம், Yulan கிராமத்தை சேர்ந்தவர் 39 வயதான ஹூவாங் சுன்சய் என்றழைக்கப்படும் சீனா யானை மனிதன், இவர் நான்கு வயதில் உலகின் மிக மோசமான அறியப்பட்ட நியூரோஃபிப்ரோடோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் சுன்சயின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. நாளடைவில் நோய் தீவிரமாக அவரது முகத்தில் 15 கிலோ அளவிற்கு கட்டி வளர்ந்துள்ளது.

இந்நிலையில், சுன்சய்யை சோதனை செய்த மருத்துவ நிபுணர்கள் அவர் நியூரோஃபிப்ரோடோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து, 2007ம் ஆண்டு சுன்சய்க்கு முதன் முதலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது .பின்னர், நன்கொடையாளர்களின் உதவியால் அவருக்கு மேலும் மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சுன்சய் நோயிலிருந்து மீண்டு குடும்பத்தினருடன் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கட்டி வளர தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது, ஹுவாங் அறிகுறிகள், வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் இருப்பினும் பலவீனமாக்கும். கட்டி மீண்டும் மெதுவாக வளர்ந்து வருகிறது.

ஆனால், இப்போதைக்கு அவர் ஒரு இயல்பான வாழ்க்கை வாழ முடியும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பார்வைத்திறன் அற்றவர்களுக்கு உதவும் புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்..!!
Next post ஆண்களாகப் பிறந்து பெண்களாக வாழ்ந்தோர் சவூதிச் சிறையில் அடித்துக் கொலை..!!