பாலூணர்வை தூண்டும் பாம்புகள்..!!
மண்ணுளி பாம்புகளில் பாலூர்ணவை தூண்டும் தன்னை இருப்பதாக கருதி, அதனை திருடிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வண்டலூர் பூங்காவில் நேற்று இரவு, சாமுவேல் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரும் மண்ணுளி பாம்புகளை திருடி ஒரு பையில் கட்டி வைத்துள்ளனர்.
வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்கள் நேரம் முடிந்த பின்னரும், இவர்கள் எதற்காக அப்பகுதியில் நின்றுகொண்டிருக்கின்றனர் என்று சந்தேகமடைந்த காவலர்கள் இவர்களை பிடித்து விசாரித்ததில், பாம்புகளை திருடியது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் பொலிசில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, கதிரவன் என்பவர் இதன் பின்னணியில் இருப்பதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
விலங்குகள் கடத்தலில் தொடர்புடைய இந்த நபர், பாலூணர்வை தூண்டும் சக்தி மண்ணுளி பாம்பை கடத்தியதாக தெரியவந்துள்ளது. அதனை கொன்று, அதிலிருந்து பாலூணர்வை தூண்டும் மருந்து தயாரிக்கப்படுகிறது.
அதன் காரணமாகவே, இந்த வகை பாம்புகள், இந்தியாவில் இருந்து, வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. தற்போது, கடத்தல் செயலில் ஈடுபட்டு வரும் கதிரவன் என்பவனை தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளன
Average Rating