சீனாவில் இரத்த ஆறு ஓடும்! ஐ.எஸ் தீவீரவாதிகள் வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ..!!
சீனாவில் இரத்த ஆறு ஓடும் என ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஜின்ஜியாங் மாகாணம் உள்ளது. அங்கு பூர்விகமாக வசித்த உய்குர் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் ஆவார்கள்.
கடந்த 1990ல் உய்குர் முஸ்லிம்கள் தனி நாடு கோரி சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அந்த போரட்டத்தை சீன ராணுவம் ஒடுக்கியது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2009ல் உய்குர் முஸ்லிம்களுக்கும் சீன மக்களுக்கு இடையே வெடித்த வன்முறையில் பலர் இறந்தனர்.
இன்னும் அவர்களின் தனி நாடு கோரிக்கை நிறைவேறவில்லை.இது சம்மந்தமாக் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் சிறுவர்கள் பலர் ஆயுத பயிற்சி பெறுகின்றனர்.
பின்னர் வீடியோவில் ஒருவர் பேசுகையில், உய்குர் முஸ்லிம்களின் விருப்பத்தை சீன மக்கள் புரிந்து கொள்ள வில்லை.
விரைவில் நாங்கள் சீனாவுக்கு ஆயுதங்களோடு வருவோம். சீனாவில் ரத்த ஆறு ஓடுவது உறுதி என அதில் கூறியுள்ளார்.
Average Rating