கணவனிடம் விவாகரத்து கிடைக்காததால் ஆத்திரம்: மகளை உயிருடன் எரித்த தாயார்..!!

Read Time:2 Minute, 19 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)கனடா நாட்டில் கணவனிடம் விவாகரத்து கிடைக்காத மனைவி ஒருவர் தன்னுடைய மகளை தீயிட்டு எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள அல்பேர்ட்டா நகரை சேர்ந்த Laura Coward என்ற தாயார் தான் இந்த கொடூரச் செயலில் ஈடுப்பட்டுள்ளார்.

இவருக்கும் இவரது கணவருக்கும் விவாகரத்து பெருவதில் நீண்ட நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும், மகள் யாருடன் இருப்பது என்ற பிரச்சனையும் இருவருக்கும் இடையில் நிகழ்ந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு மகளுக்கு தாயார் தூக்க மாத்திரைகளை கொடுத்துள்ளார்.

பின்னர், மகளை தூக்கிச்சென்று காரில் படுக்க வைத்து காரை பூட்டியுள்ளார். காரின் மீது எரிபொருளை ஊற்றிய தாயார் தீயை வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இச்சம்பவத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இக்கொலை தொடர்பாக கணவர் பொலிசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து மனைவி கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த பெப்ரவரி 16-ம் திகதி தாயார் குற்றவாளி என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

மேலும், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட உள்ளதால் எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தாயாருக்கு பரோல் வழங்கப்படும் என்ற விசாரணை நிலுவையில் இருந்துள்ளது.

தாயாருக்கு பரோல் வழங்குவது தொடர்பாக தற்போது முடிவாகியுள்ள நிலையில், அவருக்கு இறுதி தீர்ப்பு நாளை வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூங்கும்போது செய்யும் தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்கும்..!!
Next post பித்தப்பை கற்கள் – தெரிந்து கொள்ள வேண்டிவை..!!