மாமனாரின் பாலியல் கொடுமை: பொலிசில் புகார் அளித்த மருமகள்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் மென்பொறியாளரின் மனைவியிடம் அவரின் மாமனார் வரதட்சணை கேட்டு பாலியல் தொல்லை தந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தும்கூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கும், பெங்களூரு இந்திராநகரை சேர்ந்த மென்பொறியாளருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
லட்சுமியின் கணவர் அமெரிக்காவில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இதனால், அவர் தனது மாமனார், மாமியாருடன் இந்திராநகரில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த லட்சுமியிடம் அவரது மாமனார் பாலியல் தொல்லை மற்றும் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தி வந்ததாக தனது கணவர் மற்றும் மாமியாரிடம் கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததால், மனம் உடைந்த லட்சுமி, பெங்களூர் பசவனகுடி மகளிர் காவல் நிலையத்தில் தனது மாமனார் மீது புகார் அளித்துள்ளார்.
லட்சுமி அளித்த புகாரின் பெயரில் பசவனகுடி மகளிர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating