பையில் 8 சிசுக்கள் – ரகசியமாக புதைக்கப்பட்ட 19 பெண்கள்..!!
மருத்துவமனை ஒன்றின் அருகில் இருந்து 19 சிதைக்கப்பட்ட கருக்களை கண்டறிந்த பொலிஸார், சட்டவிரோத கருகலைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக சந்தேகிக்கிறது.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றின் அருகில் இருந்து 19 சிதைக்கப்பட்ட கருக்களை பொலிஸார் கண்டறிந்துள்ளது.
“அவற்றை அழிக்கும் நோக்கத்துடன் புதைக்கப்பட்டிருப்பதாக” சங்லி மாவட்ட பொலிஸ் மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர்.
சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பில் ஒரு பெண் உயிரிழந்தது தொடர்பான விசாரணையில், உள்ளூர் மருத்துவமனைக்கு அருகில் சிதைக்கப்பட்ட கருவை தேடியபோது, இந்த அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்பு நிகழ்ந்த்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
விழிப்புணர்வு பிரசாரங்களுக்கு மத்தியிலும், பெண் சிசுக்கொலை பெரிய அளவில் தொடர்ந்து நடைபெறுவதை, இது மீண்டும் நிரூபிப்பதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
“இது கருக்கலைப்பு மோசடியாக தோன்றுகிறது. உயிரிழந்த பெண்ணின் கணவரை கைது செய்திருக்கிறோம், தலைமறைவாகியிருக்கும் கருக்கலைப்பு செய்த மருத்துவரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று பொலிஸ் கண்காணிப்பாளர் தத்தாத்ராய் ஷிண்டே தெரிவித்தார்.
இதே போன்ற சம்பவங்கள் கடந்த காலத்திலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
2012 ஆம் ஆண்டு, மத்திய இந்திய மாநிலமான மத்தியப்பிரதேசம் இந்தூரில் ஒரு ஏரியின் அருகே இருந்த ஒரு பிளாஸ்டிக் பையில் எட்டு பெண் சிசுக்களின் சிதைக்கப்பட்ட கருக்கள் கண்டெடுக்கப்பட்டன.
2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் சாக்கடைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.
பெண் குழந்தைகளை காப்பாற்றும் பிரசாரங்களை மேற்கொண்டிருப்பவரும், பி.பி.சியின் அங்கீகரிக்கப்படாத இந்தியர்கள் என்ற தொடரில் கலந்துக் கொண்டவருமான டாக்டர் கணேஷ் ராக், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வதற்காக, சட்டவிரோதமாக பாலின பரிசோதனை செய்வதும், கருகலைப்பும் இந்தியாவில் தற்போதும் நடைமுறையில் இருப்பதை இந்த அண்மைச் சம்பவம் நிரூபிப்பதாக கூறியிருக்கிறார்.
“இது மிகவும் கொடூரமானது. இந்தியாவில் இனப்படுகொலை அளவிற்கு பெண் சிசுக் கொலைகள் நடைபெறுகிறது. மக்கள், ஆண் குழந்தைகளையே விரும்புவதையும், பெண் குழந்தைகள் தேவையற்றவர்களாகவே இருப்பதையுமே இது காட்டுகிறது” என்று அவர் சொல்கிறார்.
“சாங்லியில் கருக்கலைப்பு மிகப் பெரிய அளவில் நடப்பதாக கருதுகிறேன். மருத்துவர் கைது செய்யப்பட்டால், மேலும் பல சிசுக்களின் கொலை குறித்த தகவல்கள் வெளிவரும் என்று அஞ்சுகிறேன்”.
ஆண் குழந்தைகளையே பெரிதும் விரும்பும் சமூக போக்கு நிலவும் இந்தியாவில், விரும்பிய பாலினத்தை தேர்வு செய்து, கருக்கலைப்பு செய்வதும், கருவில் இருக்கும் பாலினத்தை தெரிந்து கொள்ள பரிசோதனைகள் மேற்கொள்வதும் சட்டவிரோதமாகும்.
Average Rating