நடிகர், நடிகைகளின் நம்பிக்கையை இயக்குனர்கள் காப்பாற்றுவதில்லை: சுஜா வருணி..!!
2002-ம் ஆண்டு தமிழ் பட உலகில் காலடி வைத்தவர் சுஜா வருணி. முன்னணி இடத்தை பிடிக்க முயற்சி செய்து வரும் இவருக்கு இன்னும் நாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை. சிலபடங்களில் சாதாரண வேடத்தில் நடித்திருக்கிறார். இதுபற்றி சுஜா வருணி கூறும்போது,
நடிகர், நடிகைகள் இயக்குனர்களை நம்புகிறோம். ஆனால் சில சமயம் அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவது இல்லை. எல்லா நடிகர், நடிகைகளும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்கிறார்கள். படத்தின் நேரத்தை மனதில் வைத்து கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள். ஆனால் அந்த காட்சிகளை அதில் நடித்தவர்களிடம் கேட்காமலேயே கத்தரித்து விடுகிறார்கள்.
இதுபோல பலமுறை எனக்கு நடந்து இருக்கிறது. இன்னும் எனக்கும் பல நடிகர், நடிகைகளுக்கும் நடந்து கொண்டிருக்கிறது. காட்சிக்கு எது தேவை என்பது இவர்களுக்கே தெரியவில்லை என்றால், நீங்கள் ஏன் பணத்தையும், நடிகர்களின் திறமையையும் வீணாக படமாக்குகிறீர்கள்.
வளர்ந்து வரும் நடிகைகள் கவுரவ தோற்றத்தில் நடிப்பது வீண். கவுரவ தோற்றம் எல்லாம் பிரபலமான நடிகர்களுக்குத்தான் சரி. இதுபோன்ற விஷயங்கள் வளரும் நடிகர்களை காயப்படுத்துகிறது. பாடம் கற்றுக் கொண்டேன். விரைவில் ஜெயிப்பேன். யாரும் நம்பிக்கையை கைவிட வேண்டாம் என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
Average Rating